Wednesday, June 04, 2008

பெண்ணே..!

தவழ்ந்து பழகும் தென்றலின் மீது
நடந்து பழகஆசை - உனது புண்ணகையால்
மிதந்து பழகும் இதயங்களோடு நானும்
நீந்திப் பழக ஆசை.!

அரும்பு இதழ் விரிக்கும் ஓசை
கேட்டிட ஆசை - உனது மௌன
வாய் செவ்விதழ் பிரியும் இசை
கேட்டிட ஆசை.!

இருட்கதவை தட்டி எழுப்பும் சூரியக்கதிரை
பார்த்திட ஆசை - உனது ஒளிவீசும்
கண்களில் விளித்திட ஆசை.!

அதிகாலை குருவிக் கீச்சல்கள்
கேட்டிட ஆசை - உனது சோம்பல்
விரட்டும் காலை சிணுங்கல்கள்
கேட்டிட ஆசை.!

2 comments:

Senthil said...

டேய் சரி இல்லையே, ரொம்ப ஃபிலிங்க்ஸ கொட்டிருக்க. யாருடா அந்த பொண்ணு ?

Unknown said...

அண்ணா நீங்க வேற..ஏதோ தோணுச்சு..