Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Monday, December 13, 2010

வாழ்த்துக்கள் பல....!

""" காதல் திருமணத்தில், மணமக்களிடம் """

பாராட்டுக்கள்..
சாதனையாளர்கள் உங்கள் இருவருக்கும்!
சாதி வேலிக்கம்பிகளில் ஒன்று
சற்றே நெளிந்திருக்கிறது உங்களால் இன்று..!

பரிசுகள்..
காதலர்கள் உங்கள் இருவருக்கும்!
இது என்ன
புதுவகை புன்னகை இருவர் முகத்திலும்
அது நாணமா? இல்லை காதல் வெற்றிக்கு
இந்த மண்டபம் தந்த பரிசா?
எதுவாயினும் பத்திர படுத்துங்கள்
அழகாய் இருக்கிறது உங்களோடே இருக்கட்டும்..!

வாழ்த்துகள்..
புதியவர்கள் உங்கள் இருவருக்கும்!
நேற்று வரை ஒற்றுமைகள் காட்டி
உங்கள் வேற்றுமைகளை மறைத்து பூட்டி
வைத்திருக்கும் காதல்- திருமணம் இனி
வேற்றுமையும் திறந்து காட்டும்..
உயர் பொறுமை காத்து,
விடுதல் விடா இருப்பின்
நீங்கா ஆனந்தமும் தாழா கீர்த்தியும்
இல்முன் என்றும் காத்து நிற்கும்..!
வாழ்த்துக்கள் பல....

Sunday, February 28, 2010

பாசத் தலைவனுக்கு...

உனக்கு தெரியாது..

உனக்கு தெரியாது..
எனக்கு உன்னைத்தான்
பிடிக்கும் என்று...
துடிக்கும் இதயத்தில்
உயிராகி விட்டாய்
சிமிட்டும் விழிகளில்
ஒளியாகி விட்டாய்..
எப்போது எந்நாளில்
என்மௌன உதடுகளில்
ஒலியாக போகிறாய்
என்காதல் நீதான்
என்று நான் சொல்ல!

உனக்கு தெரியாது..
எனக்கு உன்னைத்தான்
பிடிக்கும் என்று...!

-------------------------------------------
பாசத் தலைவனுக்கு

பாசத் தலைவனுக்கு..
பாசத் தலைவனுக்கு ஓர் கடிதம்
உலக பொது மறையாம்
திருக்குறளுக்கு புதிய உருவம்
அருளிய வாழும் ஓவிய
வள்ளுவனே - தன்மானம் கற்பித்த
பெரியாரின் வழி நடந்தவனே..
அண்ணாவின் வழியிலே தம்பிகள்
படைசூழ நீ நடத்திய தமிழ் போராட்டம்
படித்து வியந்தேன் - "வாழும் அரசியல்"
தலைவர்களில் "எனக்கு" தெரிந்து
உன்னைவிட தமிழையும் தமிழனையும்
நேசித்தவர் இல்லை என்பதால்
உன்னிடம் எனக்கொரு கேள்வி உண்டு!

பூக்கும் ரோஜாக்களின் எல்லாம்
மனித ரெத்தவாடை வீசுகிறதாம்
ஈழ பூமியில் இன்று..
தனிஈழம் நிலையில் இருந்து
அரசியல் தீர்வு என்று இறங்கிய
தமிழனை தோட்டாக்களால் துழைத்த
வெறியர்களை தடுத்திருக்க வேண்டிய
இந்தியா எதற்கோ பழி தீர்ப்பதுபோல்
வேடிக்கை பார்த்தபோது நீங்களும்
வேடிக்கை பார்ததைக்கண்டு அரண்ட
கோடிகளில் நானும் ஒருவன்...
இலாக்காவிற்கு காட்டிய ஆர்வத்தில்
இலங்கை தமிழனுக்கு காட்டியிருந்தால்
சிறுதேனும் தமிழன் வாழ்ந்திருப்பானேன்றே
பதறுகிறது இதயம்! இன்று
உதவிகளுக்காக வேண்டிநிற்கும்
எஞ்சிய தமிழனுக்கும் நிவாரண
உதவிகள் நிர்வானமாய் இருக்கிறது..
அவன் வாழ்வு சிறக்குமா? இல்லை
அவன் இனியாவது வாழ்வானா?
--------------------------------------------------

Friday, June 20, 2008

கனாக் கண்டேன்..!

நீண்ட நாட்களுக்குப்பின் ஓர்
கனாக் கண்டே னம்மா
கண் இமைத் திறையில்
புதிய உலகம் கண்டேன்

சிகப்பு வெள்ளை பச்சை (hinduism,christianity,islam)
ஒருநாள் இணையக் கண்டேன்
எளியவரை நசுக்காத தர்மச்
சக்கரம் ஒன்று கண்டேன்

வெண் புறாக்கள் மட்டும்
விண்ணை அளக்க்க் கண்டேன்
துப்பாக்கிகள் வேலை இன்றி
துப்புறவு செய்யக் கண்டேன்

மக்கட் குறை தீர்க்கும்
ஓராட்சி நடக்க்க் கண்டேன்
இந்நாட்டு மன்னர்களுக்கு காத்திருக்கும்
மந்திரிஒருவர் வாழக் கண்டேன்

தேசநதிகள் இணைந் தோட
எங்கும் பசுமைபெறக் கண்டேன்
குடிமிச் சண்டை இல்லாக்
குழாய்யடி இருக்கக் கண்டேன்

எங்கும் சமத்துவம் வாழும்
தேசம் ஒன்று கண்டேன்
காதலுக்கு பூங்கொத்து மட்டும்
கொடுக்கும் கரங்கள் கண்டேன்

அந்திநேரம் ஏழையின் சிரிப்பு
ஒளியில் உன்கரம் பற்றி
நடக்கக் கண்டேன் கனாக்
கண்டேனம்மா கனாக் கண்டேன்

Wednesday, June 11, 2008

புன்னகை மட்டும் பூக்கட்டும்.! புகை அல்ல.!!

ஆழமான தோழா உனக்கென்
நட்பு நினைவில் உள்ளதா?
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம்கைகள் குலுங்கி பிரிந்த்திலிருந்து!

நீ தானா..?
அதே தோள்கள்; சற்று பருமல்
அதே கண்கள்; கண்ணாடி புதிது
அதே புன்னகை; உதட்டின் கருமை புதிது
அடே புகைப்பாயோ..??
புன்னகை பூத்த இடத்தில்
புகை ஏனடா இன்று ?

என்ன.. புகைப்பதை விட முடியவில்லையா..??

அன்றாடம் கையோடு இருக்க
ஆறாம் விரலா அது..?இல்லை
அழித்தாலும் அழி யாத
கை ரேகையா அது..??

சிகரெட் சுட்டவடு கையில் இருப்பது
சிகரம் தொடும் செயலென நினைத்தாயோ?

சொல்கிறேன் கேள்..
புகைப்பதால் உனது நுரையீரலில்
புற்று(cancer) கட்டி விடும்
மரணம் எனும் பாம்பு!
உனது கொள்ளிக்கு தினமும்
நீயே தீவைப்பது மடமையடா!

உதடுகள் புன்னகை வளர்க்க
மட்டும்; புகை வளர்க்க அல்ல...

Sunday, June 08, 2008

செவ்வானம்..!!

செவ்வானம்..!!

வாட்டிய வெயிலை
விரட்டிய போரில்
கொட்டிய குருதி
உறைந்த போர்க்களம்
செவ்வானம்..!!!

நீல வானம்
நிர்வாணம் கழைந்து
செவ்வாடை அணிந்தாளோ..?

Wednesday, June 04, 2008

ஏக்கம்..!!!

News Headlines: NASA's Phoenix retesting release of Martian Soil

அவர்களின் ஃபீனிக்சு
செவ்வாயில் இன்று
நமது அன்னம்
பறக்கப் போவது என்று..???

பெண்ணே..!

தவழ்ந்து பழகும் தென்றலின் மீது
நடந்து பழகஆசை - உனது புண்ணகையால்
மிதந்து பழகும் இதயங்களோடு நானும்
நீந்திப் பழக ஆசை.!

அரும்பு இதழ் விரிக்கும் ஓசை
கேட்டிட ஆசை - உனது மௌன
வாய் செவ்விதழ் பிரியும் இசை
கேட்டிட ஆசை.!

இருட்கதவை தட்டி எழுப்பும் சூரியக்கதிரை
பார்த்திட ஆசை - உனது ஒளிவீசும்
கண்களில் விளித்திட ஆசை.!

அதிகாலை குருவிக் கீச்சல்கள்
கேட்டிட ஆசை - உனது சோம்பல்
விரட்டும் காலை சிணுங்கல்கள்
கேட்டிட ஆசை.!

கல்லூரி..!!!

கல்லூரி்..!
கண் விளித்தால் எதிரே உன்முகம் தான்
கரம் உயர்த்தி் ஒளிவீசி புண்ணகைக்கிறாய்
இசையாக.! கண் மூடினாலும் - உன்
முகமே..அந்த இனிய நாட்கள்
எந்த பிறவியில் எப்போது இனிவரும்...??